search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலை கடத்தல்"

    • இந்த சிற்பங்கள் கிமு 1ஆம் நூற்றாண்டு முதல் கிபி 11 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்தவை.
    • சிலை கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுபாஷ் கபூருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    நியூயார்க்:

    இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் விற்பனை செய்யப்பட்ட 15 சிற்பங்களை அமெரிக்க அருங்காட்சியகம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உள்ளது. சுபாஷ் கபூர் மீதான குற்றவியல் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த சிற்பங்களை திருப்பி அனுப்புகிறத-

    இந்த சிற்பங்கள் அனைத்தும் கிமு 1ஆம் நூற்றாண்டு முதல் கிபி 11 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்தவை. டெரகோட்டா, செம்பு மற்றும் கற்சிற்பம் ஆகியவை அடங்கும்.

    இதுதொடர்பாக நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற பெருநகர கலை அருங்காட்சியகம் (மெட்) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சந்தேகத்திற்குரிய வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்ட பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க பொருட்களை அருங்காட்சியம் தீவிரமாக மதிப்பாய்வு செய்கிறது. மேலும், இந்திய அரசாங்கத்துடனான நீண்டகால உறவுகளை மிகவும் மதிப்பதுடன், இந்த பிரச்சனையை தீர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிலை கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு 10 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சுபாஷ் கபூர் திருச்சி மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • நடராஜர் சிலையை விற்க ஒரு சிலர் விலை பேசி வருவதாக சமூக வளைதளங்களில் பரவியது.
    • பெரியசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நடராஜர் சிலையை விற்க ஒரு சிலர் விலை பேசி வருவதாக சமூக வளைதளங்களில் பரவியது இதனைப் பார்த்த கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், ஆவினங்குடி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு உத்தரவிட்டார். அவரின் உத்தரவின் பேரில் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சீனிபாபு, ஆவினங்குடி சப்-இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் ஆவினங்குடி, திட்டக்குடி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இத்தகவலை சமூக வளைதளங்களில் வெளியிட்டவர்களை தொடர்பு கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வேப்பூரை அடுத்த காஞ்சிராங்குனத்தை சேர்ந்த பெரியசாமியின் (வயது 42) உறவினர்கள் இதனை வெளியிட்டது தெரியவந்தது. உடனடியாக பெரியசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

    அவர் தந்த தகவலின் பேரில் ஆவினங்குடி ராமர் (33), வேப்பூர் அடுத்த பாசார் ராமச்சந்திரன் (33), மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த ராஜசூரியன்பேட்டையை சேர்ந்த சரவணன் (35) ஆகியோரை பிடித்தனர்.

    இதில் தொழுதூர் அடுத்த அதர்நத்தத்தை சேர்ந்த வேல்முருகன் தன்னிடம் நடராஜர் சிலை உள்ளது. இதை விற்றுக் கொடுத்தால் பங்கு தருவதாக ராமர், சரவணனிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிலை வாங்குவது போல வேல்முருகனை ஆவினங்குடிக்கு ராமர் வரவழைத்தார். அப்போது ராமர், சரவணன் மற்றும் அவர்களது நண்பர்கள் வேல்முருகனை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த சிலையை பறித்து ராமர் வீட்டி பதுக்கிவிட்டனர்.

    இச்சிலையினை பெரியசாமி, ராமச்சந்தின் ஆகியோரிடம் விற்க ராமர், சரவணன் முயற்சித்தனர். அப்போது நடராஜர் சிலையை பெரியசாமி படம் பிடித்து அவரது உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். பெரியசாமியின் உறவினர்கள் நடராஜர் சிலை விற்பனைக்கு உள்ளது என்று சமூக வளைதளங்களில் பதிவிட்டனர். இது வைரலாக பரவியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து மேற்கண்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடமிருந்த நடராஜர் சிலையை பறிமுதல் செய்தனர். இந்த சிலை ஐம்பொன்னால் ஆன சிலையா? என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இந்த வழக்கின் முக்கிய நபரான பா.ம.க. பிரமுகர் வேல்முருகனை போலீசார் தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர். அப்போது திட்டக்குடி அடுத்த அரங்கூரில் வேல்முருகன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு விரைந்த போலீசார் பா.ம.க. பிரமுகர் வேல்முருகனை இன்று காலை கைது செய்தனர். இந்த சிலை எங்கிருந்து திருடப்பட்டது? அல்லது வேறு யாராவது கொடுத்து விற்க சொன்னார்களா? எப்படி கிடைத்தது? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் பா.ம.க. பிரமுகர் வேல்முருகனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கோவிலில் நடராஜர் சிலை எந்த இடத்தில் இருந்தது? எப்படி திருட்டு போனது? என்பது தொடர்பாக கோவில் ஊழியர்கள், பக்தர்களிடம் சிலை தடுப்பு குழுவினர் விசாரித்தனர்.
    • தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகள், இந்திய தொல்லியல்துறை மூலமாக நடராஜர் சிலை ஏலமிடப்படுவதை தடுத்து நிறுத்தினர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் பழமை வாய்ந்த அகிலாண்ட ஈஸ்வரி சமேத கோதண்ட ராமேசுவரர் கோவில் உள்ளது.

    சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் இருந்த 15-ம் நூற்றாண்டை சேர்ந்த நடராஜர் சிலை உள்பட 4 சிலைகள் கடந்த 1972-ம் ஆண்டு திருட்டு போனது. இது தொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 3 சிலைகளை மீட்டனர். நடராஜர் சிலையை தேடி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 16-ந் தேதி பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் ஒரு ஏல மையத்தில் நடராஜர் சிலையை ஏலமிடத் திட்டமிட்டு உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் அது கயத்தாறு கோதண்ட ராமேஸ்வரர் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன நடராஜர் சிலை என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகள், இந்திய தொல்லியல்துறை மூலமாக நடராஜர் சிலை ஏலமிடப்படுவதை தடுத்து நிறுத்தினர். அந்தச் சிலையை இந்திய தூதரகம் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சமீர்பானு, சப்-இன்ஸ்பெக்டர் சகாய செல்வின் ஆகியார் அடங்கிய குழுவினர் நேற்று கயத்தாறு கோதண்ட ராமேசுவரர் கோவிலுக்கு வந்து ஆய்வு நடத்தினர்.

    அப்போது கோவிலில் நடராஜர் சிலை எந்த இடத்தில் இருந்தது? எப்படி திருட்டு போனது? என்பது தொடர்பாக கோவில் ஊழியர்கள், பக்தர்களிடம் சிலை தடுப்பு குழுவினர் விசாரித்தனர்.

    தொடர்ந்து பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கண்டுபிடிக்கப்பட்ட நடராஜர் சிலையை மீட்டு இந்திய தூதரகம் மூலம் மீட்டு 3 மாதத்தில் கயத்தாறு கோதண்ட ராமேசுவரர் கோவிலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி, அஸ்திர தேவர், அம்மன், வீர பத்ரா, மகாதேவி சிலைகள் மீட்கப்பட்டன.
    • சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

    சென்னை:

    சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 7-வது பிரதான சாலை பகுதியில் ஒரு வீட்டில் பழங்கால சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் ஆகியோரது மேற்பார்வையில் டி.எஸ்.பி.க்கள் முத்துராஜா, மோகன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி, அஸ்திர தேவர், அம்மன், வீர பத்ரா, மகாதேவி சிலைகள் மீட்கப்பட்டன.

    சிலைகளின் உரிமையாளர், கலைப் பொருட்களை சேகரிப்பது தனது பொழுதுபோக்காக இருந்ததாகவும், 2008 மற்றும் 2015-ம் ஆண்டு தீனதயாளனிடம் இருந்து பழங்கால சிலைகளை வாங்கியதாகவும் தெரிவித்தார்.

    நிற்கும் விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலையில் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ கோவில் என்று பொறிக்கப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ கோவிலுக்கு சென்று விசாரித்ததில் இந்த சிலைகள் அங்கு திருடப்பட்டது உறுதியானது.

    மீதமுள்ள சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

    நின்ற பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகளையும் விரைவில் ஆதிகேசவ கோவிலில் ஒப்படைக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.

    • கோவிலில் திருட்டு போன தேவி சிலையையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
    • சிலையின் தற்போதைய சர்வதேச சந்தை மதிப்பு ரூ.3 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா திருத்துறைப்பூண்டி பண்ணத்தெருவில் பழமை வாய்ந்த பரமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வெண்கல விநாயகர் சிலை திருட்டு போனது. இதுதொடர்பாக கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த சிலை குறித்த குறிப்புகள் கோவிலில் இல்லாததால், புதுச்சேரி கலைப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை போலீசார் அணுகினர். அங்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோவில்களின் தல வரலாற்று பதிவுகள், சாமி சிலைகள் புகைப்பட தொகுப்புகள் உள்ளன. இதில் திருட்டு போன விநாயகர் சிலையின் புகைப்படம் இருந்தது.

    அதுமட்டுமின்றி இந்த கோவிலை சேர்ந்த மேலும் 11 சிலைகளின் புகைப்படங்களும் இருந்தன. இந்த சிலைகளும் 40 ஆண்டுகளுக்கு முன்பு அடுத்தடுத்து கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்தது.

    இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய புலன் விசாரணையில், இந்த கோவிலில் திருடப்பட்ட விநாயகர் சிலை அமெரிக்காவின் நார்டன் சைமன் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சிலை மதுரை ஆதீனத்துக்கு சொந்தமானது என்பதும், சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த சிலையை கடத்தி விற்பனை செய்திருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த சிலையின் தற்போதைய சர்வதேச சந்தை மதிப்பு ரூ.3 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

    இதேபோன்று இந்த கோவிலில் திருட்டு போன தேவி சிலையையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த சிலையை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சோதேபிஸ் என்ற ஏல நிறுவனம் ரூ.39 லட்சத்து 98 ஆயிரத்து 575-க்கு அங்குள்ள அருங்காட்சியகத்துக்கு விற்பனை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து இந்த 2 சிலைகளையும் 'யுனெஸ்கோ' ஒப்பந்தத்தின் கீழ் மீட்டு, பரமேஸ்வரர் கோவிலில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கவனம் செலுத்தி உள்ளனர். மேலும் இந்த கோவிலில் கொள்ளை போன மற்ற சிலைகளை கண்டுபிடிக்கும் பணியிலும் தீவிரம் காட்டியுள்ளனர்.

    • இந்த படத்தின் விளம்பர முன்னோட்டமாக ஒரு வண்டியில் படத்தில் வரும் பள்ளிகொண்ட கிருஷ்ணர் சிலை ரதம் போல் அமைக்கப்பட்டு அந்த ரதத்தில் மாயோன் பட விளம்பரங்கள் அமைக்கப்பட்டு 40 நாட்கள் தமிழகம் முழுவதும் வலம் வர முடிவு செய்யப்பட்டது.
    • பண்டைய தமிழர்களின் ஆன்மீக அறிவியலும் சிறுவர்களுக்கு பிடித்த அறிவியல் மாயாஜாலங்களும் இந்த படத்தில் உள்ளதால் அனைத்து வயதினரையும் நிச்சயம் ஈர்க்கும்.

    தஞ்சாவூர்:

    நடிகர் சிபிராஜ் - தான்யா ரவிச்சந்திரன் ஜோடியாக நடித்துள்ள படம் மாயோன். இந்த படத்தை அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து உள்ளார். கிஷோர் இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

    இதில் கே.எஸ்.ரவிகுமார், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். புத்தம் புதிய களத்தில் கடவுள், அறிவியல், சிலை கடத்தல், புதையல் வேட்டை என பரபர திகில் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தின் விளம்பர முன்னோட்டமாக ஒரு வண்டியில் படத்தில் வரும் பள்ளிகொண்ட கிருஷ்ணர் சிலை ரதம் போல் அமைக்கப்பட்டு அந்த ரதத்தில் மாயோன் பட விளம்பரங்கள் அமைக்கப்பட்டு 40 நாட்கள் தமிழகம் முழுவதும் வலம் வர முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இந்த ரதம் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று நேற்று திருச்சிக்கு சென்று அடைந்தது. இந்த நிலையில் இன்று திருச்சியிலிருந்து தஞ்சை பெரிய கோவிலுக்கு ரதம் வந்தது.இதை அறிந்த பொதுமக்கள், பெரிய கோவிலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் ரதத்தை பார்வையிட்டு கிருஷ்ணர் சிலையைக் கண்டு ரசித்து தரிசனம் செய்தனர். மேலும் சிலை அருகே நின்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். பலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். எடுக்கப்பட்ட புகைப்படங்களை உடனுக்குடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.இதுகுறித்து பட தயாரிப்பாளர் அருள்மொழி மாணிக்கம் கூறும்போது,

    "மாயோன் ரதம், தமிழகமெங்கும் யாத்திரையாக வலம் வந்து கொண்டு இருக்கிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மாயோன் பள்ளிகொண்ட கிருஷ்ணரை வணங்கி வருகின்றனர். வருகிற 30-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் இந்த ரதம் சுற்றி வருகிறது. இது உள்ள கிருஷ்ணர் சிலை 12 அடி நீளம் , ஆறரை அடி அகலம் உடையது. தமிழகத்தில் ஆன்மீக அறிவியலை கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தின் சுவாரசியமான கதையாக இருக்கும்.

    பண்டைய தமிழர்களின் ஆன்மீக அறிவியலும் சிறுவர்களுக்கு பிடித்த அறிவியல் மாயாஜாலங்களும் இந்த படத்தில் உள்ளதால் அனைத்து வயதினரையும் நிச்சயம் ஈர்க்கும். தொல்பொருள் ஆராய்ச்சியாளராக வரும் நடிகர் சிபிராஜ் , கதாநாயகி தான்யாவுக்கும், கோவில் அறங்காவலராக வரும் ராதாரவிக்கும் இடையே நடக்கும் நவீன அறிவியலா? ஆன்மீகமா? போட்டி மக்களை சுவாரசியபடுத்தும். மக்கள் மத்தியில் மாயோன் திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வருகிற 24-ம் தேதி தமிழகம் மற்றும் உலகமெங்கும் இப்படம் வெளியாகிறது" என்றார்.

    சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூரின் கூட்டாளி பரமதுரையை 15 நாள் காவலில் வைக்க கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கும்பகோணம்:

    நெல்லை மாவட்டம் பழவூரில் பிரசித்தி பெற்ற நாறும்பூநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது.

    இந்த வழக்கில் சுபாஷ் சந்திரகபூர், வல்லப பிரகாஷ், ஆதித்யா பிரகாஷ், தீனதயாளன் உள்ளிட்ட 18 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாஷ் சந்திரகபூர், வல்லப பிரகாஷ், ஆதித்யா பிரகாஷ், தீனதயாளன் உள்பட 10 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் தேடிவந்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூரின் கூட்டாளியான தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பரமதேவன்பட்டியை சேர்ந்த பரமதுரை (வயது 42), கடந்த 13 ஆண்டுகளாக போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பரமதுரை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சென்னைக்கு சென்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் நின்ற பரமதுரையை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பரமதுரையை போலீசார் நேற்று கும்பகோணத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    தொடர்ந்து அவரை போலீசார் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பரமதுரையை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு கொண்டு சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.

    இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ள நாறும்பூநாதர் கோவிலில் கொள்ளை போன பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகளில் ஆடல் நடராஜர், சிவகாமி அம்மன், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், அஸ்திர தேவர், வெயில்காத்த அம்மன், கோமதி அம்மன், சுப்பிரமணியர் உள்ளிட்ட 9 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் நடராஜர் சிலை மட்டும் ரூ.15 கோடி மதிப்புள்ளது. கைது செய்யப்பட்ட பரமதுரை மீது சிலை கடத்தல் வழக்கு மட்டுமின்றி பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×